கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்? எச்சரித்த போலீஸ்..

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சரண்யா பொன்வண்ணன். இவரின் கணவர் நடிகர், இயக்குனருமான பொன்வண்ணன்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் சரண்யா பொன்வண்ணன் வசித்து வருகிறார். அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பக்கத்து வீட்டு பெண் ஸ்ரீதேவி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இது சினிமா துறையினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என போலீசார் விளக்கம் கொடுத்து இருக்கின்றனர்.

சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தபோது அவரது கார் மீது பக்கத்து வீட்டுகாரர் கேட் திறந்து இடித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த வீட்டினருக்கும் சரண்யா பொன்வண்ணன் உறவினருக்கும் சண்டை நடந்து இருக்கிறது.

பக்கத்து வீட்டு பெண் வாடா போடா.. அப்படி தாண்டா இடிப்போம்” என தகாத வகையில் பேசி இருக்கிறார். சத்தம் கேட்டு பொன்வண்ணன் மற்றும் சரண்யா இருவரும் வெளியில் வந்து பார்த்து தங்கள் உறவினரை வீட்டுக்குள் கூட்டி சென்றிருக்கின்றனர்.

அந்த சிசிடிவி காட்சியை தான் சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி போலீசில் கொடுத்து இருக்கின்றனர். போலீஸ் சரண்யா தரப்பை அழைத்து விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்திருக்கிறது.

மேலும், பக்கத்து வீட்டு பெண் பொய் புகார் அளித்ததால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!