மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!

பிரித்தானியா மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் 3ம் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும். அதற்காக பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பல்வேறு நாட்டு தலைவர்களும் மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!