இலங்கையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நேற்றிரவு(14) 7.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே சேதமாகிவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும், குறித்த வைத்தியசாலைக்கு 07 மணியளவில் பெட்ரோல் குண்டு தாக்குதல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!