மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43), ஜிபி ஆபிரகாம் (37). இவர்களது 11 வயது மகள் ஜேன் மரியா ஜேக்கப்.
வினோத் தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை காலி செய்து விடுவோம் என வினோத் விடுதி ஊழியர்களிடம் கூறியிருந்தார்.
ஆனால் மறுநாள் நீண்ட நேரம் அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அறையினுள் சென்று பார்த்த போதுஇ வினோத் மற்றும் அவரது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையிலும் மகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் சடலங்களையும் கைப்பற்றினர்.
அத்துடன் தம்பதி எழுதிய குறிப்பு ஒன்று சிக்கியுள்ளது. அதன்மூலம் அவர்கள் நிதி நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
எனினும் பொலிஸார் மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், வினோத் –  ஜிபியின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!