அவுஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணிலேயே பயத்தை காட்டிய வீரர்!

பாகிஸ்தான் அணி வீரர் ஆமீர் ஜமாலின் மிரட்டலான பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

சிட்னியில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

கவாஜாவை 47 ரன்களில் ஆமீர் ஜமால் வெளியேற்றினார். அதன் பின்னர் ஸ்மித் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மார்னஸ் லபுஷேன் 60 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். புதுமுக வீரர் ஆமீர் ஜமால் தனது தாக்குதலை தொடங்கினார்.

அவரது பந்துவீச்சில் ஹெட் (10), மிட்செல் மார்ஷ் (54), கம்மின்ஸ் (0) ஆகியோர் மளமளவென சரிந்தனர்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்த ஆமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்மூலம் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 82 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார் .

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!