பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்து வீரர்களை பூட்டி வைக்க வேண்டும் – வாசிம் அக்ரம் கிண்டல்

உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முன்னேறிவிட்ட நிலையில் 4வது அணி எது என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் ரன்ரேட்டில் நியூசிலாந்து முன்னிலை வகிப்பதால், பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அல்லது இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவரில் பாகிஸ்தான் எட்ட வேண்டும்.
இதில் முதலில் கூறிய சாத்தியக்கூறு வாய்ப்பு உள்ளது. அதற்கு பாகிஸ்தான் முதலில் ஆடி 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 130 ரன்களில் சுருட்ட வேண்டும்.
மாறாக, இங்கிலாந்து முதலில் ஆடினால் 50 ரன்களுக்கு குறைவாக சுருட்டி, இலக்கை 2.3 ஓவரில் பாகிஸ்தான் எட்ட வேண்டும்.
இது நடப்பதற்கு சாத்தியம் மிக மிக குறைவு என்பதால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு ஊசல் ஆடுகிறது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அளித்துள்ள நேர்காணலில், ‘ பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்றால், இங்கிலாந்து வீரர்களை உடை மாற்றும் அறையிலேயே பூட்டி வைத்துவிட வேண்டும். அப்போது Timed out கொடுக்கப்பட்டு பாகிஸ்தான் வென்று விடும் ‘ என கிண்டலாக கூறியுள்ளார்.
ஆனால், கேப்டன் பாபர் அசாம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என பூடகமாக கூறியுள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!