இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர பொலிஸாரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று (12) பதிவாகியுள்ளது.

இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரை களை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல்  செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!