மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்: சந்திரசேகரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதே எமது  நோக்கம். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றிலேயே 2022 ஆம் ஆண்டு துரலிஸ்டமான நிலையாக அமைந்தது.
69 லட்சம் வாக்குகளை பெற்று  ஜனாதிபதியாக முடிசூடி  சகல அதிகாரங்களையும் தன்வசப்படுத்தி ஆண்ட ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மாத்திரமல்லாது ராஜபக்சக்கள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
அவர்களுடைய நாய்க்குட்டியாக இருந்த நரிக்குட்டி ஒன்று ஆட்சிப் பீடத்துக்கு வந்தது. இன்று மட்டுமல்ல கடந்த 45 வருடமாகவே
இந்த நரி நரித்தனமான நடவடிக்கைகளிலேயே  ஈடுபடுகின்றது.
அந்த நரியினை ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் சக்தி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நாட்டின் தேசிய பிரச்சினை கடந்த 75 வருடங்களாக இருக்கின்ற பிரச்சனை. யார்  என்று பார்த்தால் நாட்டின் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ்க் கட்சிகள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.
இவ்வாறான பிரச்சனைகளுக்கு  தமிழ் மக்கள் தீர்வவ எதிர்பார்க்கின்றார்கள்.
தன்மானம் உள்ள தமிழனாக தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற தேவை தமிழ் மக்களுக்குள்ளது.
இதற்காகவே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் யுத்தம் தோல்வி  அடைந்திருக்கின்றது.ஏற்கனவே மேற்கொண்ட பல்வேறு  போராட்டங்களும் தோல்வி அடைந்திருக்கின்றன.
அவர்கள் மட்டுமல்ல நாங்களும் இரண்டு தடவைகள் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் போராட்டத்தில்  தோல்வியடைந்தோம்.
பத்தாயிரத்துக்கும் அதிகமான எமது இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த நாட்டில் பூவின் மக்களும் ஒரு குடையின் கீழ் அணி திரளா விட்டால் இந்த நாட்டில் விமோசனம் இல்லை என்ற கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் தொடர்ந்து உள்ளது.
இந்த பிரச்சனைக்கு நீண்டு நிலைக்க கூடியவாறு அனைத்து இன மக்களின் கருத்துக்களும் ஒன்று சேர்ந்து புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்படும்.
மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு 45 வருடங்களாகும். ஆனால்  பிரச்சினை அதே இடத்தில்தான்  உள்ளது.
நாட்டில் நீண்டு  நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வுக்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும்  வரைக இந்த மாகாண சபையை தொடர்ந்து பேண வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!