நேருக்கு நேர் சந்தித்த ஓபிஎஸ்-சசிகலா!

நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகலா, ஓபிஎஸ் இருவரும் இன்று(பிப்.3) நேருக்கு நேர் சந்தித்து பேசினர்.

இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக சசிகலா வருகை தந்தார். அப்போது முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் அவர்களும் அங்கிருந்தார்.

இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? என கேட்கப்பட்டது.

உடனே அவர், “அனைவரும் எங்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று தான் நினைக்கிறேன். இன்றைய சூழலில் எதுவும் மாறும்” என்று பதில் அளித்து சென்றார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!