தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்!

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி ஒட்டுக்கேட்பதாக அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக இடைமறித்து மென்பொருகள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக அவர் மீது அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!