மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய இருவரும்  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வருகிருரவராவர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிவநாதன் என்பவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்  இன்று காலை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பஸ்ஸொன்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றுவதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை கவனிக்காமல் மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இருந்து அணிஞ்சியன்குளம் 2 ம் பகுதி ஸ்ரீ ஷீரடிசாய்பாபா இல்ல வீதிக்கு பஸ் திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பேருந்துடன் மோதியதால் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்தி பஸ் எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதால் மோதி தூக்கி வீசப்பட்டதாகவும் மற்றயவர் பஸ் டயருக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் காயமடைந்தவர் தெரிவித்தார்
சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
சம்பவ இடத்துக்கு சென்று மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!