வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்க தலைவர் கலாபூஷணம் வே. இறைபிள்ளை  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் விருந்தினர்கள் விழா மண்டபத்துக்கு வரவேற்கப்பட்டதை அடுத்து, பண்பாட்டுப்பவனி கிளிநொச்சி காக்காகடைச் சந்தியிலிருந்தும், ஊர்திப் பவனி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்தும் ஆரம்பமாகி அங்கிருந்து விழா மண்டபத்தை வந்தடைந்தது.
ஊர்திப் பவனியின்போது, கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவச்சிலைக்கு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் பாரம்பரியப் பொருள்களின் கண்காட்சி விருந்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு பார்வையிடப்பட்டது. இக் கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, அமரர் கலாபூஷணம் அப்பச்சி வல்லிபுரம் அரங்கில் நிகழ்வுகள் சிறப்புற ஆரம்பமாகின.
அரங்கத் திறப்புரையை கலாபூஷணம் சிவ ஏழுமலைப்பிள்ளை நிகழ்த்தினார்.
தொடர்ச்சியாக, “வடந்தை” எனும் நூல் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிட்டப்பட்டது.
நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகள்,  சிறந்த நூற்பரிசு வழங்குதல், கலைக்குரிசில் விருது வழங்குதல், இளங்கலைஞர் விருது வழங்குதல், விருந்தினர்கள் உரைகள் உட்பட நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும், சமய தலைவர்கள், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தகள்,  உதவிப் பிரதேச செயலாளர்கள், பல்வேறுபட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், கலைஞர்கள்,  ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!