கொழும்புவில் நாளை தண்ணீர் வராது! எங்கெல்லாம் தெரியுமா?

கொழும்புவில் நாளை பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுகிறது.

அதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை, அதாவது மொத்தம் 15 மணி நேரம் நீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதி மக்கள் நாளை மறுநாள் நீரை வீணடிக்காமல், சிக்கனமாக பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!