நினைவேந்தலை தடுக்க எவராலும் முடியாது! – சாணக்கியன்

கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் எவ்வளவு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய எவராலும் முடியாது.
அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனேயே மட்டக்களப்பு – வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம்  உடைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்ணுக்காகப் போராடி, இந்த மண்ணிலே எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒரு இனமே விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டது.
இந்த போராட்ட காலத்தில் இலட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள அரசாங்கத்தின் நெறிப்படுதலில் இராணுவத்தினால் கொல்லப்பட்டனர்.
இது மட்டுமல்ல இறுதி யுத்தத்திலே ஆயிரக்கணக்கான மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தனர்.
இவ்வாறான நிலையிலேயே, விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் கார்த்திகை மாதத்தின் இந்த வாரத்தில்  தமிழ் மக்கள் தாங்கள் இழந்த தம் உறவுகளை நினைவுகூறுகின்றனர்.
அந்த வகையிலே வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. – என்றார்.
வாகரை துயிலும் இல்லத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட போதே சாணக்கியன் மேற்படி தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!