பாடசாலை மாணவர் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை புத்தகங்களை மூன்று பாகங்களாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடையை மூன்றில் இரண்டாக குறைக்கப்படுமென சுசில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கல்விச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுமென்றும் அப்போது தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!