தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம்
நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் நேற்று (21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை உணவு பணவீக்கமானது ஒக்டோபர் மாதத்தில் மறை 5.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் மறை 2.2 ச சதவீமாக அதிகரித்துள்ளது.
உணவல்லாப் பணவீக்கம் ஒக்டோபர் மாதம் 6.3 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 7.1 சதவீமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.