தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் பணவீக்கம்..

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம்
நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களம் நேற்று (21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை உணவு பணவீக்கமானது ஒக்டோபர் மாதத்தில் மறை 5.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் மறை 2.2 ச சதவீமாக அதிகரித்துள்ளது.

உணவல்லாப் பணவீக்கம் ஒக்டோபர் மாதம் 6.3 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 7.1 சதவீமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!