முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் கடந்த 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கொட்டும் மழைக்கு நடுவில் நேற்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலை, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் புகுந்த சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டனர்.
அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள் சனசமூக நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களின் ஆடைகளை களைந்து, அவற்றினால் அவர்களை கட்டிய நிலையில் 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்தனர்.
மேலும் ஜவர் கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதாகஉறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்தில், இடம்பெற்றன.
அப் பகுதியில், படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
உயிரிழந்தவர்களது உறவினர்களால், அவர்களுக்கான நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்தும் மலர்வணக்கம் செலுத்தியும்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் வழமை போல் ஆத்மசாந்தி பூசையும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பட்டார்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வு வளாகம் மற்றும் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்கள் எடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!