இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திரக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அனுராதபுரம் மாவட்டத்தில், உத்திரக பிரேமரத்ன போட்டியிட்டார்.
இங்கு இவர் 1,33,550 வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த அவர் தற்போது திடீரென பதவி விலகியுள்ளார்.
இந்த பதவி விலகலுக்கான காரணத்தை அவர் தற்போது வரை அறிவிக்கவில்லை.