மாதாந்த வணக்க நிகழ்வு மாசி-2024

இம்மாதத்திற்கான மாதாந்த வணக்க நிகழ்வு எப்போதும் போன்று இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 25.02.2024 அன்று மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

ஈகை பேரொளி முருகதாஸ், பேரன்னை பார்வதி அம்மாள், மூத்த உறுப்பினர் லெப்.கேணல் பொன்னம்மான், வான்கரும்புலிகள் அடங்களாக இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இக்கால பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களையும் நினைவு கூர்ந்து இவ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றலுடன் மாலை 3.00 மணி அளவில் நிகழ்வுகள் ஆரம்பமானது. பொதுச் சுடரினை திரு.அலெக்ஸ் திரு.சுலக்சன் செல்வி.தேனுகா செல்வி.ரம்யா செல்வி.ஹரிகா ஆகியோர் ஏற்றினர். தேசியக் கொடி பாடல் ஒலிக்க தேசிய கொடியினை திரு.பரணி அவர்கள் ஏற்றினார். தொடர்ந்து பொது மாவீரருக்கான ஈகைச்சுடரினைத் திரு.கோபி அவர்கள் ஏற்ற, மலர் மாலையினை திரு சுவர்ணன் அவர்கள் அணிவித்தார்.

பேரன்னையின் திருவுருவப்படத்திற்கான ஈகைச் சுடரினை திருமதி.ஜெசிந்தா அவர்கள் ஏற்ற, மலர் வணக்கத்தினை திருமதி.துக்சி அவர்கள் செலுத்தினார். மேலும் ஈகை பேரொளி முருகதாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தினை அவரின் அன்புத் தாயார் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் செலுத்தினார். தொடர்ந்து உரித்துடையோர் வரிசையில் மேஜர்.தாரகை அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரன் திரு.திருமதி கரன் குடும்பத்தினர் ஈகைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர். அதேபோன்று மேஜர். காந்தரூபன், வீரவேங்கை.பிரகாஸ் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு இவர்களது உறவினர் திரு.நசீர் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர், நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அங்கிருந்த மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றிஇ மலர் வணக்கம் செலுத்தினர். இவ்வேளை மாவீரர்களின் நினைவு பாடல் ஒன்றினை திரு.மைக்கல் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து வரலாற்று நினைவுகளை சுமந்த நினைவுப் பகிர்வினை திரு.புரட்சி அவர்கள் வழங்கினார். இறுதியில் உறுதி ஏற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!