எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்..

எக்ஸ் X (டுவிட்டர்) செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை எலான் மஸ்க் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் X (டுவிட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எலான் மஸ்க் எக்ஸ் X (டுவிட்டர்) தளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.

எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்’ என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!