தூத்துக்குடியில் தமிழர்கள் மீது பாசத்தை கொட்டிய மோடி!

தமிழர்கள் தன் மீது காட்டும் அன்பை பலமடங்காக திருப்பி தருவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக தமிழ்நாடு நேற்று வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடி சென்றார். அங்கு பல்வேறு அரசு நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து குலசேகரபட்டினத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தமிழ்நாடு வரும்போது எல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிந்து வருகின்றனர். அவர்கள் என் மீது காட்டிய அன்பை பலமடங்காக அவர்களுக்கு திருப்பி தருவேன். தமிழ்நாடு வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்ரையோடு இருப்பேன்” என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை. வளர்ச்சி குறித்து எனது கோட்பாட்டை செய்தியாக வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை” என திமுக அரசை குற்றம்சாட்டினார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!