கையடக்க தொலைப்பேசிகளின் விலையில் மாற்றம்..

இன்று (01) முதல் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பில் கையடக்க தொலைபேசி விற்பனையாளர்க தலைவர் சமித் செனரத் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வின் மூலம் கையடக்கத் தொலைபேசி சந்தையில் சுமார் 50 வீதம் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்று முதல் 100,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி 135,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!