ஸ்ரீலங்கா ஜப்பான் கிரிக்கெட் நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வீரர்கள், கிரிக்கெட் அணிகள், பயிற்சியாளர்கள், மைதான ஊழியர்கள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக இலங்கை வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஜப்பானில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கு இலங்கை அணிகள் அனுப்பப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!