மாயாவின் அறிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது

இந்திய பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 07 தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாயா, அவரின் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் ஏழாவது சீசனில் பங்கேற்ற முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் மாயா. இவர் ஒரு நடிகை. அவற்றை தாண்டி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பிரதீப்பிற்கு ரெட்கார்ட் கொடுத்த காரணத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் பூர்ணிமா, ஐசு, ஜோவிகா ஆகியோரை இணைத்து கொண்டு தனக்கென ஒரு குழுவை உருவாக்கி வைத்திருந்தார்.

நாளடைவில் இவரின் நடத்தை காரணமாக ரசிகர்கள் குறைய ஆரம்பித்து பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்த்த நிலையில் 3வது இடத்தை பிடித்து வெளியேறினார்.

இந்த நிலையில் வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாயா ரசிகர்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் “ நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நன்றி. என்னுடைய குறைகளை அனுமதித்து, என்னுடைய போராட்டத்தில் உறுதுணையாக நின்றதற்காக நன்றி. மரியாதை.. அளவில்லா அன்பு.. என்னுடைய இதயத்துடிப்பு நிற்கும் வரை இருக்கும்.

இந்த 105 நாட்கள் என்னுடைய மரணப்படுக்கையிலும் மறக்காது. உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப்போறேன். எல்லாமே உங்களுக்காகத்தான்..” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!