முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிப் போரிலே பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 18 நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்களால் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று (18) அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. 15ஆவது ஆண்டாக இன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் இறுதிப்போரில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படுகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வலி மிகுந்த வரலாற்றின் சாட்சியான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுதோறும் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால்  உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!