ஆப்கானை அடித்து நொறுக்கிய மேத்யூஸ் – ஹசரங்கா

தம்புலாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் நிசங்கா 25 ரன்களும், குசால் மெண்டிஸ் 23 ரன்களும் விளாசினர்.

அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா 14 ரன்களில் வெளியேற, கேப்டன் ஹசரங்கா 9 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்களை அடித்து நொறுக்கினார்.

அதனைத் தொடர்ந்து சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ் கூட்டணி அதிரடியில் மிரட்ட இலங்கை அணி 187 ரன்கள் குவித்தது.

அரைசதம் அடித்த சமரவிக்ரமா 51 (42) ரன்களும், மேத்யூஸ் 22 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முகமது நபி மற்றும் கரீம் ஜனத் மட்டும் வெற்றிக்காக போராடினர். ஆனால், அணியின் ஸ்கோர் 70 ஆக உயர்ந்தபோது 27 (17) ரன்களில் நபி அவுட் ஆனார்.

அடுத்து நஜிபுல்லா ஜட்ரானும் (9) ஆட்டமிழக்க, ஜனத்தை 28 (23) ரன்களில் ஹசரங்கா வெளியேற்றினார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரையும் வென்றது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!