இலங்கைக்கு கடத்தவிருந்த பல பொருட்கள் மீட்பு..

இந்தியாவிலிருந்து இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவிலான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இலங்கைக்கு சில பொருட்கள் கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மரைன் பொலிஸார் புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய், வாசனை திரவியம் உள்ளிட்ட இந்திய மதிப்பில் 16 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!