மீண்டும் ஜனாதிபதியாக கலமிறங்கப்போகும் மைத்திரி..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கட்சியின் செயற்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தம்மிக்க பெரேரா மற்றும் ஜானக ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!