வற் குறித்து மகிந்தவின் பகிரங்கம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் படும் சிரமங்கள் குறித்து தற்போதைய ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் தேர்தல்களுக்கு சிறந்த முறையில் முகங்கொடுக்க முடியும். சவால்கள் ஒரு பிரச்சனையல்ல.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் முன்வைக்கப்படுவார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் வாய்பேச்சுக்களை மட்டுமே மேற்கொண்டால் அது பலிக்காது என மகிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!