இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மு.க.ஸ்டாலின் வலியுறுத்து

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (24) கடிதம் எழுதியுள்ளார்.

இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இதுபோன்று கைது செய்யப்படுவதை தவிர்க்கவும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும் உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கை குழுவை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!