கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வேலைத்திட்டமானது நாளை(25) முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.