சிறைச்சாலைகளில் பறிபோகும் உயிர்கள் ..

களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான டபிள்யூ.ஏ.பந்துல என்ற 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!