கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி – 35 எலும்புகூடுகள் கண்டெடுப்பு!!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகளின் 6 நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன.

இந்த அகழ்வுப் பணியின் போது , 5 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 35 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த கட்ட அகழ்வு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் ஆகியோர் உட்பட  தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்... - Namthesam Tamil News November 29, 2023 - 4:29 pm
[…] கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி  […]
Add Comment