தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கேசவ் மகாராஜூக்கு, இந்திய அணி வீரர் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துள்ளது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
முதல் டெஸ்டில் கோலி 38 மற்றும் 76 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் 46 மற்றும் 12 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை, தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு பரிசாக வழங்கினார்.
நேற்றைய கடைசி டெஸ்ட் போட்டி முடிந்ததும் அவர் ஜெர்சியை அளித்துள்ளார்.
தற்போது இருவரும் ஒன்றாக ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.