தனது நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தான் பெற்ற ஆதரவு, வாழ்த்துக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்தும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில் மன்னர் சார்லஸ் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

புற்றுநோய் கண்டறிதலுக்கு பின் அவர் தற்போது மன்னர் சார்லஸ் நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ”சமீபத்திய நாட்களில் நான் பெற்ற பல ஆதரவு மற்றும் நல்ல வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற அன்பான எண்ணங்கள் மிகப்பெரிய ஆறுதல் மற்றும் ஊக்கம் என்று.

பிரித்தானியா மற்றும் பிற இடங்களில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் மீது ஒரு ஒளியைப் பிரகாசிக்க, அவரது நோயறிதல் எவ்வாறு உதவியது என்பதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிகிச்சைக்காக மன்னரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!