மன்னிப்பு கேட்டார் மன்னர் சார்லஸ்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியார் மன்னர் சார்லஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உடல்நல பாதிப்பு காரணமாக சில பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேசமயம் ஒரு மன்னராக தான் செய்ய வேண்டிய ஆவணங்கள் தொடர்பான பணிகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மன்னர் அதிகமாக யாரையும் சந்திக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், வாரம் முறை பிரித்தானியா பிரதமரை சந்திக்கும் அவரது பணி தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!