மன்னருக்கு புற்றுநோய்! ராணிக்கு வந்த பயம்

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது ராணி கமீலாவுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான ஜென்னி பாண்ட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “மன்னர் இல்லாத ஒரு வாழ்வை ராணியால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்படியாவது மன்னரின் உடல்நலத்தை நன்றாக பார்த்துக்கொண்டு, அவரை உற்சாகப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பார்.

மேலும், இளவரசர் வில்லியம் மனதில் கமீலா இடம் பிடித்துவிட்டாலும், பல்வேறு விஷயங்களில் இளவரசர் ஹரிக்கு அவர் வில்லியாக இருக்கிறார்.

இதனால், எப்படியாவது சார்லஸ் உடல்நிலையை தேற்றி அவருடனே தனது முதுமையை அனுபவிக்க கமீலா விரும்புவார்” என தெரிவித்தார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!