இந்திய அணி விளையாட உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதி ராஞ்சியில் தொடங்குகிறது.
மூன்றாவது டெஸ்டில் படுதோல்வியடைந்ததால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கடும் விமர்சனங்களை சந்தித்தனர்.
இதனால் வெற்றி பெறும் முனைப்புடன் இங்கிலாந்து அணி ஆயத்தமாகி வருகிறது.
ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் 4வது டெஸ்டில் விளையாட உள்ள அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4வது டெஸ்டில் விலகியுள்ள கே.எல்.ராகுல், கடைசி டெஸ்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.