கேரள நபருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்! நேற்று ஓட்டுநர்..இன்று கோடீஸ்வரர்

துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஶ்ரீஜு என்பவருக்கு லாட்டரியில் 45 கோடி பரிசு விழுந்துள்ளது.
39 வயதான ஶ்ரீஜு 11 வருடமாக துபாயின் புஜைராவில் வசித்து வருகிறார். ஓட்டுநரான இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.
கடந்த சனிக்கிழமையன்று வேலை செய்து கொண்டு இருந்தபோது, லாட்டரியில் பரிசு விழுந்ததை அறிந்துள்ளார் ஶ்ரீஜு.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் என் மஹ்சூஸ் கணக்கை சரிபார்த்த போது என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை.
நான் வெற்றி பெற்றதை பார்த்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி போனேன்.
எனது வெற்றி உண்மை தான் என்பதை உறுதிப்படுத்த மஹ்சூஸின் அழைப்பிற்காக நான் காத்திருந்தேன்.
மேலும் நான் கடந்த மூன்று வருடங்களாக, ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை இதில் பங்கேற்று வந்தேன். ஒரு மாதம் கூட தவறவிட்டதில்லை.
ஏனெனில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று நம்பினேன்” என தெரிவித்துள்ளார்.
ஆறு வயதுடைய இரட்டை குழந்தைகளின் தந்தையான ஶ்ரீஜு, பரிசுத்தொகையில் இந்தியாவில் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார்.
மீதி பணத்தை என்ன செய்வதென்று இன்னும் திட்டமிடவில்லை என்று கூறிய அவர் “முயற்சியைத் தொடருங்கள், என்னைப் போல் நீங்களும் வெற்றிபெறும் நாள் வரும்” என்று மஹ்சூஸின் பங்கேற்பாளர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!