கென்யாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்களை பொதுமக்கள் சோகத்துடன் தேடியலைந்தனர். அந்நாட்டில், பெய்து வரும் தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக, இதுவரை 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை, மை மைஹியு நகரத்தில், அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 48 பேர் உயிரிழந்த நிலையில், 80-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
தற்போதும் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உறவினர்களின் உடல்களை பொதுமக்கள் தேடியலைந்து வருகின்றனர்.