31 பந்தில் 71 ரன் விளாசி மில்லர் அணியை துவம்சம் செய்த யென்சன்

SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் டவுன் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

போலான்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

சிக்ஸர் மழை பொழிந்த மார்கோ யென்சன் 31 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசினார்.

அபெல் 25 பந்துகளில் 46 ரன்களும், ஹெர்மன் 36 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 164 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

பந்துவீச்சிலும் மிரட்டிய யென்சன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல் டவ்சன், பெயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!