இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்! இங்கிலாந்துக்கு 556 ரன்கள் இலக்கு

இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று 2வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

ராஜ்கோட்டில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது.

இன்று தனது இன்னிங்சை தொடங்கிய சுப்மன் கில் 91 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் களத்திற்கு வந்த ஜெய்ஸ்வால் சரவெடியாய் வெடித்தார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 214 ரன்கள் குவித்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் (13) இரண்டு முறை இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சார்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 556 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 28 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!