நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு, பெண் பத்திரிகையாளர் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இதையடுத்து வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி ஜி.செயவேல், “சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஆனால், எஸ்.வி.சேகர் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக கூறியதால், சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அபராத தொகை மட்டும் செலுத்தப்பட்டது.