யாழ். பல்கலை விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள்  மூன்று பேர்  பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதன்படி விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும், புள்ளிவிபரவியலும் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் மற்றும் கலைப் பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதிஜே.இராசநாயகம் ஆகியோரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று காலை, பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம்  துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையவாக திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின்  மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் படி, தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி.ஜெயசீலன் தாவரவியலில் பேராசிரியராகவும், கணிதவியலும் புள்ளிவிபரவியலும் துறையையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் கணிதவியலில் பேராசிரியராகவும், கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்

கலாநிதி திருமதி ஜே.இராசநாயகம் கல்வியியலில் பேராசிரியராகவும்
பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!