யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சட்டவிரோதமாக தாயகத்தில் குடியேரிய விகாரையில் முன்னெடுக்கப்படும் வழிப்படுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் மக்களது காரணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் (25.1.2024) பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!