ரொறன்ரோவில் கடும் குளிர்

கனடாவில் – ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று இரவு பனிப்பொழிவு கூடுதலாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக பியர்சன் விமான நிலையத்தில், விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!