‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வந்து 300 நாட்கள் ஆகிவிட்டதாக அஜித் ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்,த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகியதே தவிர, படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில், புதுச்சேரியில் அஜித்தின் ‘வாலி’ படம் ரீ ரிலிஸ் ஆனது. அதில் அஜித் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “படத்தின் டைட்டில் வெளியாகி 300 நாள் ஆச்சு,ஆனால் படத்தோடு அப்டேட் என்ன ஆச்சு?,லைக்காவை காணவில்லை, கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
‘விடாமுயற்சி’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.