காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு – ஜோ பைடன்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.
இந்நிலையில், ஹமாசைக் கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பைடன், தற்போது சுதந்திர பலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!