புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகை பூனம் பாண்டே உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக, பிரபல நடிகை பூணம் பாண்டே(32), நேற்று உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதன்பின் அவரது உடல் எங்கிருக்கிறது? எங்கு சிகிச்சை பெற்று வந்தார்? உடல் அடக்கம் செய்யப்பட்டதா? போன்ற எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. இதனால், பப்ளிசிட்டிக்காக பூணம் பாண்டவே இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
மேலும், பிரபல பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான உமர் சந்து தனது ஓ தளத்தில், “பூனம் பாண்டேவின் உறவினரை தொடர்பு கொண்டேன். அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். அவர் பப்ளிசிட்டிக்காக இதை செய்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.