அர்ச்சனாவின் வெற்றி பணத்தால் கிடைத்ததா?

இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற அர்ச்சனா பணம் கொடுத்து இந்த வெற்றியை வாங்கியுள்ளார் என்று மாயா போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டமையை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதே போன்று பிக் பாஸ் வீட்டில் இருந்த சிலர் மகிழ்ச்சியாகவும் இதனை கொண்டாடிய நிலையில், மாயா, அர்ச்சனா வெற்றி குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பிக் பாஸ் 7 டைட்டில் தனக்கு கிடைக்கவில்லை என்ற விரத்தியில் தான் இப்படியொரு பதிவை மாயா வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மாயாவின் இந்த பதிவு பிரபல டிவிக்கு பணம் கொடுத்து அர்ச்சனா டைட்டில் வென்றுவிட்டார் என்பது போல் இருக்கிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது.

மாயா மட்டுமின்றி நடிகை வனிதாவும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அந்த வகையில் வனிதா கூறுகையில் பிஆர் டீம் வைத்தும், இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்கள் நடந்தது.

அதன் வழியாகவே அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார் என்று வனிதா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!